நடிகர் சூரியிடம் போலீஸ் விசாரணை

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  
நடிகர் சூரியிடம் போலீஸ் விசாரணை

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநருமான ரமேஷ் குடவாலா இடம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.2.90 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

சூரியின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி விரைவில் விசாரணை நடத்தக்கோரி உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக நடிகர் சூரியிடம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக இந்த விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com