நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநருமான ரமேஷ் குடவாலா இடம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.2.90 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சூரியின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி விரைவில் விசாரணை நடத்தக்கோரி உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' பட முக்கிய காட்சி யூடியூபில் வெளியானது
இதன் ஒரு பகுதியாக நடிகர் சூரியிடம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக இந்த விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.