கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 'டான்': எஸ்.ஜே. சூர்யா

டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி என நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

Published On :


டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி என நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள டான் திரைப்படம் நேற்று (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4 மணி காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனும் அதிகாலை காட்சியில் ரசிகர்களின் வரவேற்பைக் காண சென்னையில் நிறைய திரையரங்குகளுக்கு விசிட் அடித்தார்.

முதல் நாளில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களே வந்தன.

இந்த நிலையில், டான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இன்று (சனிக்கிழமை) காலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.ஜே. சூர்யா, டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்திலும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு வழக்கம்போல் பாராட்டுகள் குவிகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.