

நடிகர் அஜித் குமாரின் துணிவு படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்பட இறுதிக்கட்ட காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படத்தொகுப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளை விரைவாக முடித்து படத்தை டிசம்பர் 25 ஆம் தேதி அல்லது பொங்கலை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளனராம். ஆனால் இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிக்க | இந்த ஆண்டு டிவியில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு படங்கள் என்னென்ன?
பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வெளியாகவிருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியானால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக துணிவு பொங்கலுக்கு வெளியாகும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
வலிமை மற்றும் பீஸ்ட் படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்காக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.