மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவானப் படம் தனி ஒருவன். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
மேலும், இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இன்றுடன் தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து தனி ஒருவன் படத்தின் 2 ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ரசிகர்களை ஏமாற்றிய சமந்தா, விஜய் தேவரகொண்டா: இதுதான் காரணமா?
இயக்குநர் மோகன்ராஜா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “3வது முறையாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்துடனும் 4வது முறையாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடனும் 7வது முறையாக ஜெயம் ரவியுடனும் என்னுடைய 11வது படமாக தனி ஒருவன் 2 படத்தில் இணைந்துள்ளதை பெருமையாக அறிவிக்கிறேன். ரசிகர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
2024இல் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.