பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

யுவன் குரலில் வெளியான மாயவலை படத்தின் முதல் பாடல்!

அமீரின் மாயவலை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Published On :

அமீரின் மாயவலை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அமீர் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 2009-ல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் அமீர் நடித்திருந்தார். இவர், மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைப் பிறகு அமீர் கதாநயாகனாக நடிக்கும் திரைப்படம் மாயவலை. இந்தப் படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இந்தப் படத்தினை வெளியிடுகிறார். இப்படத்தின் டீசரை வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில், மாயவலை படத்தின் முதல் பாடலான 'வாழ்க்கை ஒரு மாயவலை' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இப்பாடலுக்கான வரிகளை சினேகன் எழுதியுள்ளார். இப்பாடலை யுவன்சங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.