தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நடிகையாக களமிறங்கும் 'பிக் பாஸ்' பிரபலம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2023, 4:30 pm IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில்  தொடர்ந்து 6-வது முறையாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

சுமார் 106 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில், அஷீம் முதலிடம், விக்ரமன் இரண்டாமிடம், ஷிவின் மூன்றாமிடம் பெற்றனர். இறுதிப்போட்டி வரை சென்ற திருநங்கை போட்டியாளர் என்ற பெருமையை ஷிவின் பெற்றார். 

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 படத்தில்  ஷிவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, விஜய்யின் 67 வது  படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.