'ஓஷோவை விட தனித்துவமானவர் ரஜினி..’: பிரபல இயக்குநர்

'ஓஷோவை விட தனித்துவமானவர் ரஜினி..’: பிரபல இயக்குநர்

ஒஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Published on

ஒஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் ரஜினி சார், நான் கேட்டதிலேயே சிறந்த பேச்சு உங்களுடையதுதான். என்னைப் பொறுத்துவரை  நீங்கள் ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவர். உங்களின் பேச்சு புல்லரிக்க வைக்கிறது. அனைவராலும் இப்படி தங்கள் பேச்சால் புல்லரிக்க வைக்க முடியாது. விரைவில் இன்ஸ்டாகிராமுக்குள் நுழைந்து உங்களுக்கு தோன்றுவதைப் பேசுங்கள். நீங்கள் ஏ.பி.சி.டி. எனச் சொன்னாலும் அது தாளம் போலத்தான் இருக்கும். உங்கள் பேச்சைக் கேட்க மில்லியன், பில்லியன் ரசிகர்கள் காத்திருக்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com