கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எனது வாழ்க்கையின் திருப்புமுனை இந்தப்படம்தான்: கஜோல் நெகிழ்ச்சி பதிவு! 

நடிகை கஜோல் தனது சினிமா, வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் குறித்து உருக்கமான பதிவினை எழுதியுள்ளார். 

News image
Updated On :4 நவம்பர் 2023, 11:32 am

DIN

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த கஜோலின் படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ‘மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார்.

Story image

தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி -2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். 'தி ட்ரையல்' எனும் புதிய படத்திற்காக இன்ஸ்டாகிராம் பதிவுகளை அழித்து அவர் செய்த புரமோஷனை பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. 

Story image

பின்னர் லஸ்ட் ஸ்லோரிஸ் 2இல் நடித்து மீண்டும் சமகாலத்தில் வைரலாகியுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது சினிமா, வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் குறித்து உருக்கமான பதிவினை எழுதியுள்ளார். 

Story image

"உதார் கி ஜிந்தகி படம் வெளியாகி இன்றோடு 29 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் படத்துக்கு சுருக்கப்பட்ட வேறு பெயர்கள் எதுவுமில்லை. இந்தப்படம் பெரும்பாலான மக்கள் நினைவுகளில் இருக்காது. ஆனால், இந்தப்படம் எனது வாழ்கை மற்றும் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது. சினிமாவை தாண்டி பல விஷயங்களினால் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். அதை மாற்றவேண்டியிருந்தது. 20 வயதில் நான் எடுத்த முக்கியமான முடிவாக இதைப் பார்க்கிறேன்.

Story image

சிறப்பாக நடிக்க எனக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்பட்டது. எனது மனதின் (ஆன்மாவின்) பங்கு அதிகம் தேவைப்படாத படங்களில் நடித்தேன். என்னை நானே இன்னும் சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள இதெல்லாம் தேவைப்பட்டது. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொண்டேன். அப்போதுதான் என்னால் அதிகமான ஈடுபாட்டினை சினிமாவில் கொடுக்க முடியும் எனக் கற்றுக் கொண்டேன். அதை இன்றுவரை பழக்கப்படுத்தி வருகிறேன். அதன் நினைவுகளால் இன்றைய நாளில் இந்தப்பதிவு தேவைப்பட்டது. இந்த அதிவேகமான உலகில் இது அனைவருக்கும் மட்டுமல்லாமல் எனக்குமே ஒரு நினைவூட்டலாக இருக்கும்" எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.