பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டப்பிங் நிறுவனம் தொடங்கிய விக்ரம் பட வில்லன்!

பாலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் 50-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ள பிரபல வில்லன் புதிதாக டப்பிங் நிறுவனம் தொடங்கியுள்ளார். 

Published On :

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் கடாரம் கொண்டான். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ். 

இயக்குநர் மணிரத்னத்தின் ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது விகாஸ் ஸ்ரீவஸ்தவ் டப்பிங் கம்பெனி என்ற பெயரில் புதிய டப்பின் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 22 ஆண்டுகளாக ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். மணிரத்னம், கமல்ஹாசன், ஆமிர்கான், விக்ரம், ஹாலிவுட் நடிகர் ஸ்டீபன் லேங் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன். 

கிச்சா சுதீப், உபேந்திரா நடித்த கப்ஜா படத்திற்கு இந்தியில் டப்பிங் பேசினேன். டைகர் நாகேஸ்வர் ராவ் உள்ளிட்ட பல படங்களில் டப்பிங் பணிகளை செய்துள்ளேன்.

இந்தியில் இதுவரை டப்பிங் செய்யப்பட்ட அனைத்து தென்னிந்திய படங்களிலும் இயக்குநர் எதற்கு முதலிடம் கொடுத்திருந்தாரோ அந்த சாரம் இருப்பதில்லை. எனவே அவற்றின் நிஜத்தன்மையை தக்கவைத்து முழுமையாக அவற்றை மொழிமாற்றம் செய்வதே என் நோக்கம். அதற்காகவே இந்த டப்பிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.