நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

பிரண்ட்ஸ் தொடர் புகழ் மேத்யூ பெர்ரி மறைவு!

பிரண்ட்ஸ் தொடரில் சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார்.

Published On :6 பிப்ரவரி 2024, 6:48 pm IST

54 வயதான ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி, நேற்று (அக்.28) உயிழந்துள்ளார்.

மேத்யூ பெர்ரி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் வெந்நீர் குளியல் தொட்டியில் நினைவின்றி கிடந்துள்ளார் மாத்யூ. இதை கண்ட அவரது உதவியாளர் அவசர உதவிக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து சென்ற மருத்துவ குழுவால் அவரை மீட்க இயலவில்லை. அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

54 வயதான மாத்யூ பெர்ரி, பிரண்ட்ஸ் தொடர் மூலமாக அறியப்பட்டவர். 1994 முதல் 2004 வரை ஒளிபரப்பான காமெடி தொலைகாட்சி தொடரில் சாண்ட்லர் பிங் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார்.

மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு ஆட்பட்டிருந்த மாத்யூ, பல முறை மறுவாழ்வு சிகிச்சைக்கு சென்று திரும்பினார். 2018-ல் அதீத போதை பழக்கத்தால் பெருங்குடல் வெடிப்புக்கு ஆளானார், அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

தனது வாழ்வையும் போதை பழக்கத்தையும் முன்வைத்து சுயவரலாறு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.  இந்தப் புத்தகம் கடந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

கடைசி வரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.