16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

'இனியா' தொடரின் நாயகிக்கு அறுவை சிகிச்சை!

காலில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் கதாநாயகியாக நடித்துவரும் ஆல்யா மானசா விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். காலில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆல்யா பகிர்ந்துள்ளார். விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'இனியா' தொடரில், ஆல்யா மானசா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Story image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடருக்குப் பிறகு ஆல்யா மானசா நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் இரண்டாவது குழந்தையை பிறந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'இனியா' தொடரில் நடித்து வருகிறார்.

இதனிடையே விபத்தில் சிக்கியதால் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் பெரிய கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த விபத்து எதிர்பாராத ஒன்று எனவும், விரைந்து குணமடைய நண்பர்களும் ரசிகர்களும் வேண்டிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.