இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

காதலியை கரம் பிடிக்கும் சுந்தரி சீரியல் நடிகர்!

சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கும், திருமகள் தொடரில் நடித்த ஹரிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

சுந்தரி தொடரில் அரவிஷ்.

Published On :

சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கும், திருமகள் தொடரில் நடித்த ஹரிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அரவிஷ். இவர் சுந்தரி தொடரின் முதல் பாகத்தை தொடர்ந்து, இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்தவரான அரவிஷ், இலக்கியா தொடரிலும் நடித்து வருகிறார்.

அரவிஷ் மற்றும் ஹரிகா.

அரவிஷ் மற்றும் ஹரிகா.

அதேபோல், சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஹரிகா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நவ.19 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

Story image

இணைந்து நடிக்கும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் திருமணம் செய்துகொள்வது இயல்பாகி விட்ட நிலையில், மதன் - ரேஷ்மா ஆரியன் - ஹபானா, சித்து - ஸ்ரேயா, சஞ்சீவ் - ஆல்யா மானசா போன்ற பிரபலங்களின் பட்டியலில் இவர்களும் தற்போது இணைந்துள்ளனர்.

தற்போது, இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.