அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 6:02 pm IST

இந்த வாரம் திரையரங்குகளில் கள்வன் உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ஆனாலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் எஎந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

தியேட்டர் ரிலீஸ்:

ஜிவி பிரகாஷ்குமாரின் கள்வன் திரைப்படம் இன்று(ஏப். 4) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும், வல்லவன் வகுத்ததடா, வொயிட் ரோஸ், டபுள் டக்கர், ஒரு தவறு செய்தால், இரவிண் கண்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை(ஏப். 5) வெளியாகிறது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் நாளை(ஏப். 5) வெளியாகிறது.

ஓடிடி ரிலீஸ்:

ஹனுமான் திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கிஸ்மத் என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை (ஏப். 5) வெளியாகிறது.

லம்பாசிங்கி என்ற தெலுங்கு திரைப்படமும் ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த வாரம் தமிழ் திரைப்படங்கள் ஏதும் ஓடிடியில் வெளியாகவில்லை. ஆனால், முக்கிய திரைப்படங்கள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.