

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டியில் நடைபெற்றது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சூர்யாவின் பிறந்த நாளின்போது இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. சிகரெட் புகைத்தபடி, சூர்யா நடந்து வரும் அந்தக் காட்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்று வந்த சூர்யா - 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளத்திலுள்ள இடுக்கியில் துவங்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.