
நடிகர் கார்த்தி கேங்ஸ்டர் பின்னணி கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் ஜனவரி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: பாட்டல் ராதா வெளியீட்டுத் தேதி!
இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் கதை 1960-ல் ராமேஸ்வரத்திலிருந்த கேங்ஸ்டர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையைத் தொட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இது உருவாகும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.