இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

லவ்வர் படம் பார்க்கும்போது சில நிமிடங்களுக்குப் பிறகு...: செல்வராகவன் கூறியது என்ன?

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான 'லவ்வர்' படக்குழுவுக்கு சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Published On :

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

அதன் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார். நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியா நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், “லவ்வர் திரைப்படம் பார்த்தேன். பிடித்திருந்தது. இந்தக் காலத்து காதலை சிறப்பாக காட்டியிருந்தார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு நான் படம் பார்க்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். மிகவும் எதார்த்தமாக இருந்தது. மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா அருமையாக நடித்திருந்தார்கள்“ எனப் பதிவிட்டுள்ளார்.

செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலணி, மயக்கம் என்ன ஆகிய காதல் சார்ந்த திரைப்படங்கள் 90களில் பிறந்தவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.