சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

மம்மூட்டி படத்தை நகலெடுத்தாரா லோகேஷ் கனகராஜ்?

மாஸ்டர் திரைப்படத்தில் மம்மூட்டி நடித்த படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :19 பிப்ரவரி 2024, 4:10 pm IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின், விஜய்யுடன் லியோவில் இணைந்த லோகேஷ் அதையும் வெற்றிப் படமாக்கினார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், 2021-ல் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மம்மூட்டி நடித்த முத்ரா என்கிற படத்திலிருந்து நகலெடுக்கப்பட்டதாக ரசிகர்கள் விடியோ வெளியிட்டு வருகின்றனர்.

மாஸ்டரில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் சென்று அங்குள்ள சிறுவர்களை விஜய் திருத்துவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதே போன்ற காட்சிகள் சிபி மலயில் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் 1989-ல் வெளியான முத்ரா திரைப்படத்தில் உள்ளன. இந்த இரு படங்களின் காட்சிகளையும் இணைத்து, லோகேஷ் கனகராஜ் காப்பியடித்த காட்சிகள் என வைரலாக்கி வருகின்றனர்.

Story image

தற்போது, நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.