அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

100 நாள்களைக் கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் -2

கடந்த வாரம் 5.96 புள்ளிகளுடன் டிஆர்பி பட்டியலில் 11வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 உள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 3:42 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வெற்றிகரமாக 100 நாள்களைக் கடந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திற்கு 5 ஆண்டுகளாகக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 30 முதல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகத்தில் அண்ணன் - தம்பிகளின் பாசத்தை வைத்து கதை நகர்ந்தது. இரண்டாவது பாகத்தில் அப்பா - மகன்கள் இடையேயான உறவு சிக்கல்கள் குறித்து கதை நகர்கிறது.

Story image

முதல் சீசனில் மூர்த்தி கேரக்டரில் நடித்த நடிகர் ஸ்டாலின் முத்து தவிர மற்ற யாருமே பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகத்தில் இல்லை. நாயகியாக நடிகை நிரோஷா நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வி.ஜே.தங்கவேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் மகன்களாக நடிக்கின்றனர்.

பிரியா தம்பி திரைக்கதை, வசனம் எழுத வி.சி. ரவி பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரை இயக்குகிறார்.

Story image

பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், குறிப்பிடத்தகுந்த டிஆர்பி புள்ளிகளையும் பெறுகிறது. கடந்த வாரம் 5.96 புள்ளிகளுடன் டிஆர்பி பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக டிஆர்பி பெறும் 4வது தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.