வீரமங்கை வேலு நாச்சியார் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி. 'கொரில்லா' போர்முறையை முதன்முதலாக சோதித்துப் பார்த்தவர். தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர். 18-ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணி.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றினை படமாக்குகிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த ராஜ்.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!
டிரெண்ட்ஸ் சினிமாஸ் சார்பாக தயாரிக்கும் இந்தப் படத்தில் வேலு நாச்சியாராக நடிக்கிறார் அறிமுக நடிகை ஆயிஷா நடிக்கவிருக்கிறார். மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்குமெனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குமெனவும் படக்குழு தெரிவித்துள்ளது.