சஞ்சய் லீலா பன்சாலி இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘கங்குபாய் கத்திவாடி’ 3 தேசிய விருதுகளைப் பெற்றது. இதில் நடித்த ஆலியா பட் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
இந்நிலையில், சஞ்சய் லீலா பன்சாலி நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் ஆகியோரை வைத்து ‘லவ் அண்ட் வார்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதை அறிவித்துள்ளார்.
பன்சாலி புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் 2025 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.