சென்னை: பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் மகளுமான பவதாரிணி மறைவால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என பதிவிட்டுள்ளார்.