பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

'திருமகள்' நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு

திருமகள் தொடரில் நடித்த ஹரிகா சாதுவின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published On :

திருமகள் தொடரில் நடித்த ஹரிகா சாதுவின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அதிலும் முக்கியத்துவமில்லா (Non-Prime) நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்ளும் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

திருமகள் தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஹரிகா சாது. கடந்த 2020 அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகிவந்த இந்த தொடர் கடந்தாண்டு நிறைவடைந்தது.

இதனிடையே, திருமகள் தொடர் நாயகி ஹரிகா சாது, சுந்தரி தொடரில் நடித்துவரும் அரவிஷ் என்பவரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், நடிகை ஹரிகா சாது புதிய தொடரொன்றில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு ‘மணமகளே வா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

மேலும், ‘மணமகளே வா’ தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.