ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

சர்தார் - 2 படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2024, 1:47 pm IST

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் வெற்றிப்படமானது.

படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்தது.

சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி  கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். 

சர்தார் 2 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு, ஜூலை 15ஆம் நாள் இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெறுமென தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று சென்னையில் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில், நடிகர் கார்த்தி கலந்துகொண்டதாகவும் தகவல். நடிகர் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார், மெய்யழகன் என இரண்டு படங்கள் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. சர்தார் 2 படத்துக்குப் பிறகு கைதி 2 நடிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.