நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்தப் படம் சுதந்திர நாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் விடியோ வெளியிட்டு பேசியுள்ளார். அதில் அமிதாப் பச்சன் பேசியதாவது:
அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்ததுக்கு மகிழ்ச்சி. அற்புதமான படக்குழுவினர். கமல், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்றவர்களுடன் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது.
பிரபாஸுக்கு 1000 கோடி ரூபாய் வசூல் என்பது மிகவும் வழக்கமாகிவிட்டது. ஏனெனில் அவரது நிறைய படங்கள் இப்படி வசூலாகியுள்ளன. ஆனால் எனக்கு அப்படியில்லை. இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஏற்கனவே 4 முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எனக்கு புதியதாக ஒன்றை கண்டுப்பிடிக்க முடிகிறது.
கல்கியை இவ்வளவு பெரிய வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி எனக் கூறியுள்ளார்.
Words of joy from the Legendary @SrBachchan sir about the gigantic success of #Kalki2898AD â¤ï¸
— Kalki 2898 AD (@Kalki2898AD) July 17, 2024
#EpicBlockbusterKalki @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @saregamaglobal @saregamasouth
pic.twitter.com/9Tc5br2PUO
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தியில் ரூ. 100 கோடி நிலங்களை வாங்கிக் குவித்த முன்னணி நடிகர்! யார் அவர்?

ஸ்பிரிட் - கல்லூரி மாணவராக நடிக்கும் பிரபாஸ்?

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

ஜாக்கிரதை, நான் பேசினாலே பிரச்னைதான்: நடிகர் ரஜினிகாந்த்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai





