
நடிகை பூஜா ஹெக்டே சூர்யா - 44 படத்திலிருந்து தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.
தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார்.
இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார்.
இதற்கிடையே, நடிகை பூஜா ஹெக்டேவும் பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ராவும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.
தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா - 44 படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரூ. 4 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.
இதற்கு முன், ஒரு படத்திற்கு ரூ.3.5 கோடி சம்பளம் பெற்று வந்த பூஜா, சூர்யா - 44 படத்திலிருந்து சம்பளத்தை ஏற்றியுள்ளாராம்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.