இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

வைரலாகும் தக் லைஃப்!

தக் லைஃப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Published On :

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, துல்கர் சல்மான் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதால், அதிக நாள்கள் தக் லைஃப் படத்துக்கு தர முடியாத காரணத்தால் விலகியதாக தகவல்கள் வெளியாகின. அவருக்குப் பதிலாக சிம்பு இணைந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்று வருகிறது. இதில், சிம்புவுக்கான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல். சிம்புவுடன் நடிகர் கமல்ஹாசனும் இணைந்திருக்கிறார்.

இதனை உறுதிப்படுத்து விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிம்பு, வையாபுரி மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Story image

இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கான புரோமோ விடியோவை தக் லைஃப் படக்குழு வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.