மீண்டும் வெளிநாடு சென்ற நடிகர் விஜய்!

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் மீண்டும் வெளிநாடு சென்றார்.
மீண்டும் வெளிநாடு சென்ற நடிகர் விஜய்!
படங்கள்: எக்ஸ்

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மீண்டும் வெளிநாடு சென்ற நடிகர் விஜய்!
இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

ரஷியாவை தொடர்ந்து தற்போது மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார் நடிகர் விஜய். துபாய் அல்லது அமெரிக்கா என இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று (மே.11) காலையில் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் நடிகர் விஜய்யை, “விஜய் அண்ணா” என அழைத்து உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர். போகும் வழியில் ரசிகருக்கு கை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

மீண்டும் வெளிநாடு சென்ற நடிகர் விஜய்!
‘குற்றம் கடிதல் 2’ திரைப்படம் அறிவிப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com