
தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களிடம் வைரலானது.
இதற்கிடையே, தனுஷ் இயக்கும் 4-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இட்லி கடை எனும் படத்தினை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார்.
ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியானது.
இப்படத்தில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா, பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், நடிகர் தனுஷுடன் தேநீர் அருந்தும் புகைப்படத்தை நித்யா மெனன் (மேனன் அல்ல என பெயர் விளக்கம் சமீபத்தில் அளித்தார்) பகிர்ந்தது வைரலானது.
திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு தனுஷுடன் நித்யா மேனன் இணைவதால் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகுமெனக் கூறியுள்ளார்.
ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பா அல்லது பாடல் எதுவுமா என்பது நாளைதான் தெரியவரும்.
இந்தப்படம் அடுத்தாண்டு கோடைவிடுமுறைக்கு வெளியாகுமென தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.