காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

10,000 திரைகள்! சூர்யாவின் உச்ச வசூல் படமாகுமா கங்குவா?

கங்குவா திரைப்படம் மிகப்பெரிய வெளியீட்டை காணவுள்ளது...

News image
Updated On :13 நவம்பர் 2024, 2:24 pm IST

கங்குவா திரைப்படத்தின் வசூல் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது.

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நாளை (நவ.14) பிரம்மாண்டமாக வெளியாகிறது. தென்னிந்தியளவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அதிக திரைகளில் வெளியிட உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென இந்தியளவில் 6000 திரைகள் உள்பட உலகளவில் 10,000 திரைகளில் கங்குவா வெளியாகிறது. இவ்வளவு திரைகளில் வெளியாகும் முதல் சூர்யா படம் இதுதான்.

அதைத்தாண்டி, தென்னிந்தியளவில் அதிக திரைகளில் வெளியான படங்களில் பட்டியலிலும் கங்குவா இணையவுள்ளது. திரைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் வைத்தால், கங்குவா முதல் நாள் வசூலாகவே ரூ. 100 கோடியை நெருங்கும் எனத் தெரிகிறது.

ஒருவேளை இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றால், கிடைத்திருக்கும் திரைகளைக் கொண்டு வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். நடிகர் சூர்யாவுக்கும் இந்தியளவில் அங்கீகாரம் கிடைக்கலாம்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்கள் கங்குவா படம் செய்ய வேண்டிய வசூல் சாதனைகளைப் பட்டியலிட்டும் வருகின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.