மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

‘ஹே மின்னலே’ வைரலான சிவகார்த்திகேயன் - ஆர்த்தி!

நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் இருக்கும் விடியோ வைரலாகியுள்ளது..

News image
Updated On :15 நவம்பர் 2024, 4:50 am IST

நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த விடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

அமரன் திரைப்படத்தின் வெற்றியால் நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்தாண்டில் தென்னிந்தியளவில் பெரிய வசூலை அடைந்த படங்களில் அமரனும் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் ரூ. 250 கோடி வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது.

இன்னும் திரையரங்குகளில் படத்திற்கு வரவேற்பு இருப்பதால், அமரன் ஓடிடி உரிமத்தைப் பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்ட தேதியை மாற்றி டிசம்பருக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாவில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அமரன் முகுந்த் வரதராஜன் தோற்றத்தில் தன் வீட்டிற்குள் மனைவி பின்னால் நின்றுகொண்டு அவரை ஆச்சரியப்படுத்துகிறார். மேலும், விடியோயுடன் அமரனில் இடம்பெற்ற, ‘ஹே.. மின்னலே’ பாடலை இணைத்து ’பிறந்த நாள் வாழ்த்துகள். லவ் யூ’ என தன் மனைவியை வாழ்த்தியுள்ளார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பெரிதாக வைரலானதுடன் இந்தப் பதிவுக்கு 50 லட்சத்துக்கு அதிகமானோர் விருப்பம் தெரிவித்துடன் பல பிரபலங்களும் காமண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.