
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார்.
நடிகர் கார்த்தி, அர்விந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்திருந்தனர்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மெய்யழகன் திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி கிளிகளை வளர்த்துவரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
நிஜத்தில் சென்னையிலுள்ள சிந்தாதிரி பேட்டையில் சுதர்ஷன் என்பவர் கிளிகளை வளர்த்து வருகிறார். அங்குதான் இதன் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.
தற்போது இந்த இடம் சுற்றுலா தளமாக மாறியுள்ளது. இந்த வீட்டின் உரிமையாளரான சுதர்சன், வித்யா தம்பதியினர் ஒரு நாளைக்கு 25 நபர்கள் மாலை 4.30 மணிக்கு மேலாக இலவசமாக கிளிகளைப் பார்வையிடலாம் எனக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.