ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மிஸ் யூ திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு!

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் யூ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

சித்தார்த்

Updated On :27 நவம்பர் 2024, 7:51 pm IST

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது, காதல் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு மிஸ் யூ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற படங்களை இயக்கிய என். ராஜசேகர் இதை இயக்கியுள்ளார்.

தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்தில் 8 பாடல்களை இசையமைத்துள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் ’மிஸ் யூ’ திரைப்படம், நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக வெளியீட்டை ஒத்திவைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ”அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இது கடினமான முடிவென்றாலும் ரசிகர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டது. உங்களை மிஸ் செய்கிறோம்” என படக்குழு கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.