பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஹிந்தியில் அறிமுகமாகும் சூர்யா!

நடிகர் சூர்யாவின் பாலிவுட் படம் குறித்து இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பேசியுள்ளார்.

News image

நடிகர் சூர்யா.

Updated On :5 அக்டோபர் 2024, 6:23 am

நடிகர் சூர்யாவின் பாலிவுட் படம் குறித்து இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியில் நடைபெற்றது.

தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நவ.14ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா 44 படப்பிடிப்பு நிறைவடையும். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படப்பிடிப்பு இருக்கிறது. அதற்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ இந்த ஹிந்திப் படம் என்பது இன்னும் முடிவாகவில்லை.

சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜோதிகாவும் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஐஐஎஃப்ஏ விழாவில் ஹிந்திய் இயக்குநரிடம் சூர்யா படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ், “100 சதவிகிதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கர்ணா என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாக தகவல்.

இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பாக் மில்கா பாக், தூஃபான் போன்ற விளையாட்டு ரீதியான படங்கள் எடுத்து பிரபலமானவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.