சின்னத்திரையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ராஜா ராணி தொடரின் 3ஆம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.
ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ராஜா ராணி 3ஆம் பாகம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, காதலித்து திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கை ஜோடியாகவும் மாறனர். இதனால் நாயகியாக 3ஆம் பாகத்திலும் ஆல்யா மானசாவே நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.
இதனால் ராஜா ராணி தொடரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 முதல் ராஜா ராணி தொடர் ஒளிபரப்பானது. 2019 வரை ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
ராஜா ராணி தொடரில் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பும் இந்தத் தொடரில் மிகவும் பாராட்டப்பட்டது.

ராஜா ராணி - யூடியூப்
ராஜா ராணி தொடர் வங்க மொழித் தொடரான கீர் அபோன் கீர் போர் என்ற தொடரின் மறுஉருவாக்கமாகும். எனினும் தமிழில் அதிக டிஆர்பி பெற்றதால், இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் உருவானது.
இதில் ஆல்யா மானசா நாயகியாக நடித்தார். ஆனால் சஞ்சீவ் கார்த்திக்கிற்கு பதிலாக சித்து நாயகனாக நடித்தார். இவர்களுடன் ஆஷா கெளடா, அர்ச்சனா ரவிச்சத்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இத்தொடரின் 3வது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார். ராஜா ராணி தொடரின் இரு பாகங்களை இயக்கிய பிரவீன் பென்னட் மற்றும் ஆல்யா உடன் இருக்கும் புகைப்படத்தை சஞ்சீவ் பகிர்ந்துள்ளார். அதில், தயாராயிருங்கள் நண்பர்களே, ராஜா ராணி 3ஆவது பாகம் விரைவில் எனப் பதிவிட்டுள்ளார்.
இதனால் ராஜா ராணி தொடரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
சஞ்சீவ் கார்த்தி பதிவு - இன்ஸ்டாகிராம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சஞ்ஜீவ் அரோராவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

மகாநதி தொடரின் 2ஆம் பாகம் வேண்டும்! ரசிகர்கள் கோரிக்கை!

அமலாக்கத் துறையைக் கண்டு கேஜரிவாலுக்கு அச்சம்: வீரேந்திர சச்தேவா

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



