1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

அஜித் படத்துக்கு வாழ்த்து: ஜெயிலர் 2 அப்டேட் கூறிய ரஜினி!

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு ரஜினி வாழ்த்து...

அஜித் குமார், ரஜினி காந்த். - கோப்புப் படங்கள்

Published On :10 ஏப்ரல் 2025, 1:04 pm IST

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு மூத்த நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் இன்று (ஏப்.10) உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் அஜித்துடன் நடிகர்கள் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜுன் தாஸ், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திருப்பூரில் உள்ள பிரபல மல்பி பிளக்ஸ் திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில், “இன்று வெளியாகும் குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

இது குறித்த கேள்விக்கு, “படப்பிடிப்பு தொடங்கி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. எப்போது முடியுமெனத் தெரியாது” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.