திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

லியோனார்டோ டிகாப்ரியோவின் புதிய பட அப்டேட்!

ஆஸ்கர் வென்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்...

News image

ஒன் பேட்டல் ஆஃப்டர் அனதர் படத்தின் போஸ்டர்.

Updated On :16 ஏப்ரல் 2025, 3:42 pm IST

பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ’ஒன் பேட்டல் ஆஃப்டர் அனதர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லெஜண்டரி இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர்ஸ் ப்ரோஸ் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது.

டைட்டானிக் திரைப்படம் மூலம் உலக அளவில் இன்றும் டிகாப்ரியோ பேசப்பட்டு வருகிறார். தமிழ் டப்பிங்கில் இவரது பல படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளன.

ஆஸ்கர் விருதுக்கு ஏழு முறை தேர்வாகி அதில் ஒருமுறை வென்றுள்ளார். டிகாப்ரியோ நடிப்பில் கடைசியாக 2023இல் கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் பல்வேறு முக்கியமான திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

அமெரிக்க நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தப் படம் திரையரங்குகளில் வரும் செப்.26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.