விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கனிமா பாடல் எதன் தாக்கத்தினால் உருவானது? சந்தோஷ் நாராயணன் பதில்!

ரெட்ரோ படத்தில் கனிமா பாடலின் உருவாக்கம் குறித்து சந்தோஷ் நாராயணன் பேசியதாவது...

News image

கனிமா போஸ்டர். - படம்: யூடியூப் / டி சீரிஸ் தமிழ்

Updated On :22 ஏப்ரல் 2025, 8:12 pm IST

ரெட்ரோ படத்தில் கனிமா பாடலின் உருவாக்கம் பழைய தமிழ்ப் பாடலின் தாக்கத்தினால் உருவானது என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. பல நடிகைகளும் இந்தப் பாடலுக்கு நடனமாடினர்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் பாடல் குறித்து பேசியதாவது:

கனிமா பாடலினை ரசிகர்களுக்காக ப்ரேக்டௌன் (எப்படி உருவானது) செய்ய வேண்டுமெனத் தோன்றுகிறது. ஏனெனில் இந்தப் பாடலில் மிகவும் பாரம்பரியமான இசைக் கருவிகளை பயன்படுத்தியுள்ளோம்.

என் ஆசை மைதிலியே பாடலின் தாக்கத்தினால்தான் இந்தப் பாடலை (கனிமா) உருவாக்கினேன். இதில் பயன்படுத்திய கருவிகள், எப்படி இசையை கலந்தேன், இதன் செயல்பாடுகள் குறித்து எல்லாம் கூற ஆசைப்படுகிறேன்.

இந்தப் படத்தில் பொதுவாக 80, 90களில் இருந்த இசையையும் தற்போதுள்ள இசையையும் கலந்து புதியதாகக் கொடுக்க முயற்சித்துள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.