நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு!

போதைப்பொருள் வழக்கில் கைதான ஷைன் டாம் சாக்கோ குறித்து...

News image

ஷைன் டாம் சாக்கோ

Updated On :29 ஏப்ரல் 2025, 11:00 am IST

நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன் ஆழப்புழாவிலுள்ள ரிசார்ட் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மலையாள சினிமா பிரபலங்களுக்கு கஞ்சா விற்பனை செய்த்தாக ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து, அவர் குறிப்பிட்ட நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி மற்றும் இளம் மாடல் நடிகை சௌம்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் கலால் துறை அதிகாரிகள் நேற்று (ஏப். 28) நடத்திய 10 மணிநேர விசாரணையில் மூன்று பேருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இவர்கள் தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாட்டில் இருப்பது உறுதியானது.

இந்த நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவை தொடுபுழாவிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கலால் அதிகாரிகள் சேர்த்துள்ளனர். குடும்பத்தினரின் ஒப்புதலுடனே இது நடந்துள்ளது.

அங்கு, சாக்கோ சில மாதங்கள் சிகிச்சையில் இருப்பார் என்றும் அவர் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் கலால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீநாத் பாசி மற்றும் சௌம்யா ஆகியோரை விசாரணையிலிருந்து விடுவித்துள்ளனர். தேவைப்பட்டால், இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் இம்மூவருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றும் கலால்துறை துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.