மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு!

போதைப்பொருள் வழக்கில் கைதான ஷைன் டாம் சாக்கோ குறித்து...

News image
ஷைன் டாம் சாக்கோ
Updated On :29 ஏப்ரல் 2025, 5:30 am

DIN

நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன் ஆழப்புழாவிலுள்ள ரிசார்ட் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மலையாள சினிமா பிரபலங்களுக்கு கஞ்சா விற்பனை செய்த்தாக ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து, அவர் குறிப்பிட்ட நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி மற்றும் இளம் மாடல் நடிகை சௌம்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் கலால் துறை அதிகாரிகள் நேற்று (ஏப். 28) நடத்திய 10 மணிநேர விசாரணையில் மூன்று பேருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இவர்கள் தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாட்டில் இருப்பது உறுதியானது.

இந்த நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவை தொடுபுழாவிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கலால் அதிகாரிகள் சேர்த்துள்ளனர். குடும்பத்தினரின் ஒப்புதலுடனே இது நடந்துள்ளது.

அங்கு, சாக்கோ சில மாதங்கள் சிகிச்சையில் இருப்பார் என்றும் அவர் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் கலால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீநாத் பாசி மற்றும் சௌம்யா ஆகியோரை விசாரணையிலிருந்து விடுவித்துள்ளனர். தேவைப்பட்டால், இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் இம்மூவருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றும் கலால்துறை துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.