நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
/

இரண்டு பாகமாக உருவாகும் கார்த்தி - 29?

கார்த்தி - 29 படம் குறித்து....

News image
Updated On :11 பிப்ரவரி 2025, 3:20 pm IST

நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 29-வது படம் இரண்டு பாகங்களாக தயாராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தின் வெளியீடு தாமதமாகி வருகிறது. தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் கதை 1960-ல் ராமேஸ்வரத்திலிருந்த கேங்ஸ்டர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையைத் தொட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இது உருவாகும் எனத் தெரிகிறது. நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கார்த்தி - 29 படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.