நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சிம்பு குரலில் ‘டீசல்’ இரண்டாம் பாடல் வெளியீடு!

டீசல் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு.

News image

சிம்பு / ஹரீஷ் கல்யாண்

Updated On :18 பிப்ரவரி 2025, 4:57 pm IST

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படத்தில் சிம்பு பாடிய இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது.

பார்க்கிங், லப்பர் பந்து படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படம் ’டீசல்’. அடங்காதே, புறநகரம் போன்ற படங்களின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தினை எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாகவும் வினய், கருணாஸ், அனன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘பீர் சாங்’ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், டீசல் படத்தில் நடிகர் சிம்பு, ஸ்வேதா மோகன் பாடியுள்ள இரண்டாவது பாடலான ’தில்லுபரு ஆஜா’ இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை ரோகேஷ், ஜிகேபி ஆகியோர் எழுதியுள்ளார்.

டீசல் திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.