வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

இயக்குநராகத்தான் ஆசைப்பட்டேன்: நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் இயக்கும் புதிய திரைப்படம் குறித்து...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:58 pm IST

நடிகர் ரவி மோகன் தான் இயக்கிவரும் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரவி மோகன் நடித்த கராத்தே பாபு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ரோ கோட், பென்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடிப்பதுடன், இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார்.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகர் ரவி மோகன், “இயக்குநராகத்தான் ஆசைப்பட்டேன். நிறைய திரை விழாக்களுக்குச் சென்றது, அப்பா மற்றும் அண்ணனின் திரைப்படங்களைக் கவனித்தது என இயல்பாகவே இயக்குநர் ஆசை இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக நடிகனாகிவிட்டேன். நீண்ட காலமாக இயக்குநராகத் திட்டமிட்டு இப்போது நிகழ்கிறது. ஒரு சாதாரண மனிதன் நல்ல மனிதாகி அந்த நல்ல மனிதன் எப்படி கடவுளாகிறான் என்கிற கோணத்தில்தான் இந்தப் படத்தின் கதை இருக்கும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கதையை யோசித்து வைத்திருந்தேன். என் அண்ணன் மோகன் ராஜாவிடமும் இக்கதையைச் சொல்லியிருக்கிறேன். அவரும் தன் கருத்துகளைச் சொன்னார். ஆனால், இறுதியான முடிவு என்னுடையதுதான். இப்படம் என்ன ஆனாலும் அது என் பொறுப்பாகத்தான் இருக்கும்.

இப்படத்திற்கு ஆர்டினரி மேன் எனப் பெயரிடுவதற்கு முன்பே தமிழிலேயே கடவுள் என்றே பெயரிட்டேன். ஆனால், ரசிகர்கள் வேறு எதையாவது யோசிக்கக் கூடாது என்பதற்காகா சாதாரண மனிதனைக் குறிப்பிடும் விதமாக ஆங்கிலத்திலேயே வைத்துவிட்டேன். இயக்குநரான அனுபவம் கலவையாகவே இருக்கிறது. ஒருநாள் ஜாலியாக இருந்தாலும் இன்னொரு நாள் கத்த வேண்டும். ஆனால், நல்ல திரைப்படமாக உருவாக அனைவரும் ஒத்துழைக்கின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Ravi Mohan has spoken about the film he is directing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.