‘வருகிறோம்...’ மோகன்லாலின் த்ரிஷ்யம் - 3!

த்ரிஷ்யம் - 3 படம் குறித்து...
‘வருகிறோம்...’ மோகன்லாலின் த்ரிஷ்யம் - 3!
Published on
Updated on
1 min read

நடிகர் மோகன்லால் த்ரிஷ்யம் - 3 படத்திற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லையென்றாலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நீதிமன்றக் காட்சியும் படத்தை வெற்றியடையச் செய்தன.

தொடர்ந்து, இந்தப் படத்தின் 3-வது பாகம் உருவாகும் என இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தெரிவித்திருந்தார். 2025 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் - 3 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் ’த்ரிஷ்யம் - 3 உறுதியானது’ என அவருடன் ஜித்து ஜோசஃப் மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், “கடந்தகாலம் அமைதியாகவே இருக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், படத்தின் பணிகள் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com