டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

தேவர் மகன், நாயகனை 30 முறைக்குமேல் பார்த்திருக்கிறேன்: த்ரிஷா

கமல் படங்கள் குறித்து த்ரிஷா பேசியுள்ளார்...

Published On :

நடிகை த்ரிஷா கமல் ஹாசன் படங்கள் குறித்து பேசியுள்ளார்.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.

இப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ஓடிடி மற்றும் வெளியீட்டு உரிமங்கள் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து பங்கேற்றனர்.

அப்போது, த்ரிஷாவிடம் ‘நடிகர் கமல் ஹாசனின் படங்களில் உங்களைக் கவர்ந்தவை எது?’ எனக் கேட்கப்பட்டது.

அதற்கு த்ரிஷா, “நடிகர் கமல் ஹாசனின் படங்களை நிறைய பார்த்திருக்கிறேன். முக்கியமாக, தேவர் மகன், நாயகன், மைக்கல் மதன காமராஜன் ஆகிய படங்களை 30 முறைக்குமேல் பார்த்துவிட்டேன். விக்ரம் திரைப்படத்தை திரையரங்கிலேயே 3 முறை பார்த்தேன். பின், வீட்டில் இரண்டு முறை கண்டுகளித்தேன்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.