சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தினர்.
தற்போது, முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நானியின் ஹிட் - 3 டீசர்!
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதில், “மீனாட்சி, மயில், மல்லி; முதல்கட்ட படப்பிடிப்பு இந்த பூமியில் என் விருப்ப இடமான மதுரையில் முடிவடைந்தது” எனத் தெரிவித்துள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.