ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கிங்ஸ்டன் டிரைலர் தேதி!

ஜி.வி.பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி.

Updated On :25 பிப்ரவரி 2025, 8:21 pm IST

ஜி.வி.பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.

பேச்சிலர் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதியே, கிங்ஸ்டன் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். தனது நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமான கிங்ஸ்டன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார்.

கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடிக்கிறார்.

யுகபாரதி வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார், சுப்லக்‌ஷினி இணைந்து பாடிய இந்தப் படத்தின் முதல் பாடலான ’ராசா ராசா’ சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் இரண்டாவது பாடலான ’மண்ட பத்திரம்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை கானா ஃபிரான்சிஸ் எழுதிப் பாடியிருக்கிறார்.

கிங்ஸ்டன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில், இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் பிப்.27ஆம் தேதி வெளியாகவிருக்கிறதென கூறப்பட்டுள்ளது.

கிங்ஸ்டன் போஸ்டர்.

கிங்ஸ்டன் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.