பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

1.34 நிமிட குட் பேட் அக்லி டீசர்..! எத்தனை மணிக்கு தெரியுமா?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி டீசர் தேதி, நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி போஸ்டர்.

Published On :

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி டீசர் தேதி, நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். தமிழ் புத்தாண்டு வெளியாக ஏப். 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதனால், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகவுள்ளன.

சில நாள்களுக்கு முன் நடிகை த்ரிஷா ‘ரம்யா’ என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக விடியோ வெளியிட்டு அறிவித்தனர்.

பிப். 25ஆம் தேதி குட் பேட் அக்லி படத்தின் டீசர் வருகிற பிப். 28 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ வெளியானது.

அந்த புரோமோவில் அஜித் இரு வெவ்வேறு தோற்றங்களில் வருவதும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் நாளை (பிப்.28) மாலை 7.03 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 1 நிமிடம் 34 நிமிடம் டீசர் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.