காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!
/

வரவேற்பைப் பெறும் காதலிக்க நேரமில்லை டிரைலர்!

காதலிக்க நேரமில்லை டிரைலர் குறித்து...

News image
Updated On :8 ஜனவரி 2025, 11:38 am IST

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.

ஏ. ஆர், ரஹ்மான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னை இழுக்குதடி’ பெரிய வரவேற்பைப் பெற்றது.

நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜன. 14 ஆம் தேதி பொங்கலன்று வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேற்று (ஜன. 7) வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெற்று வருகிறது. பெண்கள் பின் சுற்றும் நாயகனுக்கும் கர்ப்பமான நாயகிக்கும் இடையேயான காதல் கதையாக இது இருக்கலாம் என்பது டிரைலரில் தெரிகிறது.

சிலர், ஓகே கண்மணி போல் இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், டிரைலரில் இடம்பெற்ற, “எல்லா பெண்களும் உங்களின் பெண்ணியப் பார்வையை எல்லா விஷயத்திலும் திணிக்காதீர்கள்” என்கிற வசனம் பெண் இயக்குநர் கிருத்திகாவால் எழுதப்பட்டிருப்பது நன்றாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.