வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

வல்லான் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!

சுந்தர். சி நடிப்பில் உருவாகியுள்ள வல்லான் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவரம்.

News image

வல்லான் போஸ்டர்

Updated On :23 ஜனவரி 2025, 12:09 pm IST

சுந்தர். சி பிறந்தநாளில் ‘வல்லான்’ என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இதில் சுந்தர் சி உடன் தன்யா ஹோப், ஹெபாப் படேல், அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளார்கள்.

விஆர் மணி செய்யோன் எழுதி இயக்கியுள்ள வல்லான் படத்தினை விஆர் மணிகண்டன், வி. காயத்ரி இணைந்து தயாரித்துள்ளார்கள்.

சமீபத்தில் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான மதகஜராஜா படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வல்லான் படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ள வல்லான் படம் வரும் ஜன.24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகராக சுந்தர். சி கடைசியாக அரண்மனை 4இல் நடித்திருந்தார். மேலும் 2 படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வல்லான் போஸ்டர்.

வல்லான் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.