விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் 6வது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5 சீசன்களின் வெற்றிக்குப் பிறகு, 'ஸ்டார்ட் மியூசிக்' நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பிப் பார்க்கின்றனர்.
இந்நிகழ்ச்சியின் 4 சீசன்களை தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனை மட்டும் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்கினார்.
ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பாடல்கள் குறித்து கேள்வி கேட்கப்படும். இதில் சினிமா, தொலைக்காட்சி பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
பாடல்களை மையப்படுத்தி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுவதால், இசை ரசிகர்கள் மத்தியில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்துள்ளது.
இந்த புதிய சீசனை பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி ஜூன் 15 ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
விஜய் தொலைக்காட்சியில் நட்சத்திர தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு வசி என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
அவருடைய திருமணத்துக்குப் பிறகு பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி 'ஸ்டார்ட் மியூசிக் - 6' என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கண்மணி - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரிமளா அண்ட் கோ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

குடும்ப ரசிகர்களைக் கவரும் புதிய இணையத் தொடர்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரஞ்சித்தின் தாய் மாமன் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



