நடிகை அதுல்யா முக அறுவை சிகிச்சை குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
காதல் கண் கட்டுதே, அடுத்த சாட்டை, கேப் மாரி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை அதுல்யா ரவி. கச்சிதமான தோற்றத்தில் இருப்பவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வைரலாவார்.
ஆனால், முகம் முன்பைவிட பளபளப்பாகவும் சீராகவும் இருப்பதால் ரசிகர்கள், அதுல்யா முக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இவர் நடித்த மெட்ராஸ் சிட்டி கேங்ஸ்டர் பட நிகழ்வில், “நீங்கள் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறுகிறார்களே, உண்மையா?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு அதுல்யா, “நான் முக அறுவை சிகிச்சையெல்லாம் செய்யவில்லை. ஏன் என்னைக் குறித்த வதந்திகள் பரவுகின்றன எனத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.